10 இலட்சம் இலங்கையர்களது தொழில் வாய்ப்புக்கு ஆபத்து வரலாம் !

Tuesday, March 13th, 2018

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்ததால் மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளில் தொழில் புரியும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கக் கூடுமென தகவல்கள் தெரிவிக்கின்றன

அத்துடன் இந்த நிலமை காரணமாக இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தெழில் புரிந்து வருவதால் கிடைத்து வரும் 50 ஆயிரம் கோடி ரூபா அந்நிய செலவாணியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது .

வெளிநாடுகளில் தொழில் புரியும் நோக்கில் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை வருடம் தேறும் அதிகரித்து வருகின்றது இவர்களில் அதிகளவானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கின்றனர் கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் மூன்று லட்சம் பேர் மத்திய கிழக்கு  நாடுகளிற்கு தொழிலுக்காக சென்றுள்ளனர் .

10 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளில் தொழில் புரிந்து வருகின்றனர் . எனினும் இலங்கையில் முஸ்லிம் மக்களின் மொத்த எண்ணிக்கை 19 இலட்சத்து 67 ஆயிரத்து 523 என்பது குறிப்பிடத்தக்கது .

Related posts: