வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்ல ஆங்கில அறிவு அவசியம் – அமைச்சர் தலதா அதுகோரல!
Thursday, December 21st, 2017வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயப்படுத்தப்படவுள்ளது. நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் தலதா அதுகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் வெளிநாடுகளில் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. mஅதேநேரம், வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்கள் அங்கிருந்தே இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வழிமுறை குறித்தும் ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பேர் வரையில் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வட மாகாணத்தில் சிவில் பணி ஒப்பந்த பொதியை வழங்க அமைச்சரவை அனுமதி!
தென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை!
எரிபொருள் கொள்வனவிற்கு பணமில்லை - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
|
|