விதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்தியை மேற்கொண்ட 7 நிறுவனங்கள்!
Thursday, December 21st, 2017
விதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்தியை மேற்கொண்ட 7 நிறுவனங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்கள் தொடர்பிலான சுற்றுவளைப்புகளை கடந்த 4 ஆம் திகதி முதல் முன்னெடுத்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டார்.
உணவு பொதியிடும் லஞ்ச் சீட் , பொலித்தீன் பைகள் மற்றும் உணவு பொதியிடும் பெட்டிகளுக்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலித்தீன் பாவனை தடை தொடர்பிலான முதலாவது திட்ட அடிப்படையில் சுற்றிவளைப்புகள் மேற்கொண்டு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வவுனியாவிலுள்ள அரியாலை ஆராதனைக்கு சென்றவர்களிற்கு இரண்டாம் கட்ட பரிசோதனை!
யாழ். பல்கலை கொரோனா சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள்...
மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தி!
|
|