மருந்துகளை வாங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்திட்டம் – இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை!

Wednesday, August 30th, 2023

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தொற்றா நோய்களுக்கான மருந்துகளை வாங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்  ஆரம்பித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இந்நாட்களில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் 10 வைத்திய முகாம்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் செய்து வருகிறது.

EY Global Delivery Service வழங்கும் 25,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள் மூலம், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச மருத்துவச் சேவைகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஏற்கனவே முன்னெடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: