மின் கட்டணத்தினை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய!

Monday, May 14th, 2018

மின்சார கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை என மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருட்களில் விலை அதிகரித்துள்ள நிலைக்கு சமாந்தரமாக இலங்கையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், மின்சார அலகின் பெருமதியை அதிகரிக்க இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: