இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இலங்கை வருகை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட சந்திப்பு!

Tuesday, July 11th, 2023

இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை வந்துள்ளார்

அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியினுள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: