மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு சமையல் எரிவாயு 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ விநியோகம் இருக்காது – மக்களுக்கு லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!
Saturday, June 4th, 2022
நாட்டில் மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு சமையல் எரிவாயு 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ விநியோகம் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது எங்களிடம் எரிவாயு சிலிண்டர்கள் இல்லையெனவும், மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவத்தின் முத்த அதிகாரி கேட்டுகொண்டுள்ளது.
“நாங்கள் விரைவில் ஏற்றுமதியை எதிர்பார்க்கிறோம், சில நாட்களில் விநியோகத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டின் பல பகுதிகளில் நேற்றும் சமையல் எரிவாயு கோரி வரிசைகளிலும் மற்றும் போராட்டங்களிலும் ஈடுபட்டமை காண முடிந்தாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழிலிருந்து கொழும்புக்கு செல்லும் புகையிரதங்கள் இரத்து - பயணிகள் அவதி!
அரசாங்க வேலைத்திட்டங்களை சீர்குலைத்தால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் - ஜனாதிபதி ரணில் வ...
ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்க நடவடிக்கை-இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரி...
|
|
|


