பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை கணிப்பீடு!
Wednesday, March 21st, 2018
பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவில் காணப்படுகின்றது.
பாடசாலை செல்லாத மாணவர்களில் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டமாக யாழ்.மாவட்டம் காணப்படுவதாக ஆய்வின் மூலம்கண்டறியப்பட்டுள்ளது.
தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் நாட்டில் பாடசாலை கல்வியை கற்க வேண்டிய வயதைகொண்ட பிள்ளைகளில் 3.4 சதவீதமான பிள்ளைகள் ஒருநாளேனும் பாடசாலைக்கு செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு 5 – 20 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டது. இந்த வயதிற்குட்பட்ட 95 சதவீதமானோர் பாடசாலைகல்வியை தொடர்வதாக கண்டறியப்பட்டுள்ளது
Related posts:
உலகை அச்சுறுத்தும் கொரோனா: ஏப்ரல் இறுதிவரை சமூக இடைவெளித் திட்டம் நீடிப்பு - அமெரிக்க ஜனாதிபதி!
விவசாய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு துறைசார் நிபுணர்கள் ஜனாதிபதியிடம் கோரி...
பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல திருத்தங்கள் - வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
|
|