பாடசாலைப் பக்கமே போகாத 1,523 பேர் சிறைச்சாலையில்!

Tuesday, January 16th, 2018

ஒரு நாளேனும் பாடசாலைக்குச் செல்லாத ஆயிரத்து 523 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தரம் ஐந்து வரையில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த 6 ஆயிரத்து 129 பேரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 2 ஆயிரத்து 643 பேரும், உயர் தரத்தில் சித்தியடைந்த 909 பேரும் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறைச்சாலைகளில் 55 பட்டதாரிகளும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை, போகம்பரை, மகர உள்ளிட்ட 25 சிறைச்சாலைகளில் 24 ஆயிரத்து 60 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

மாகாண சுகாதார பரிந்துரைகளுக்கு அமையவே நடைமுறைகளை தளர்த்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் – ஜனாதிபதி...
எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன்பெற நிதி அமைச்சு பேச்சுவார்த்தை - எரிசக்தி அமைச்சர் ...
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையின் இரண்டாம் பாகம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் கையளிப்பு!