ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை வெளியேறியுள்ளமையினை உறுதிப்படுத்தியது இலங்கை விமானப்படை!

Wednesday, July 13th, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையினை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை விமானப்படையினால் இன்று புதன்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசியல் அமைப்புக்கு அமைய, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமும் தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவும், பாதுகாப்பு அமைச்சின் முழுமையான அனுமதியின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.’ எனத் தெரிக்கப்பட்டுள்ளது

முன்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறி மாலைதீவுக்கு சென்றுள்ளதாக, செய்திகள் வெளியாகியிருந்தன.

அதிகாலை 1.45 அளவில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான அண்டோனோ 32 ரக விமானத்தில், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியுடன், அவரது பாரியாரும், அவர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: