தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்த சட்டம்!
Wednesday, October 18th, 2017
தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் மேற்கொள்ளும் செலவுகளைச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் தற்போதைய தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான பின்னணியை உருவாக்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
Related posts:
நாளாந்த சம்பளமாக 1,000 ரூபா வழங்காத தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தொழில் ஆணையாளர் நா...
அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றிய ஐந்து சந்தேக நபர்கள் கைது !
பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம் - விவசாய சேவைகள் திணை...
|
|