நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பில் பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செய்தி!
Saturday, April 11th, 2020முதியோர்கள், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் சமுர்த்தி குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பணிகள் தெ்ாடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி வரை 62,977 பேருக்கு ரூபா 5000 நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறுநீரக நோயாளிகளுக்கான ரூபா 5000 கொடுப்பனவுகள் இதுவரையில் 38,083 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமுர்த்தி பயனாளிகளுக்கான ரூபா 5000 கொடுப்பனவு 78,962 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
30 உதவிச் சட்டவுரைஞர்கள் நியமிக்கப்படுவர் - நீதியமைச்சின் செயலாளர்!
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம்!
20 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் புதிய வர்த்தமானி - அமைச்சருமான விமல் வீரவன்ச!
|
|