9 ஆவது நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட 25 தமிழ் உறுப்பினர்கள்!

Friday, August 7th, 2020

நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் சார்பில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மவட்டத்திலிருந்து ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில்  டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் சிவஞானம் சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  சார்பில் அங்கஜன் ராமநாதன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் திருகோணமலை  மாவட்டத்திலிருந்து இலங்கை தமிழரசு கட்சி சார்பில் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டள்ளார்.

வன்னி தேர்தால் மாவட்டத்திலிருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் குலசிங்கம் திலீபன், இலங்கை தமிழரசு கட்சி சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். ஜெயராஜலிங்கம்  ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிள்ளையான், இலங்கை தமிழரசு கட்சி சாணாக்கிய ராகுல், கோவிந்தன் கருணாகரன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எஸ். வியாழேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மனோ கணேசன் தெரிவு செய்யப்பட்டுள்ள அதே வேளை கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேலு குமார் தெரிவாகியுள்ளார்.

மேலும் நுவரெலியா மாவட்டத்த்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பழனி திகம்பரம், வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், எம். உதயகுமார், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்

பதுளை மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார் ஆகியோர் என மொத்தமாக 25 பேர்  நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்களால் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: