முழுமையான தடுப்பூசித் திட்டத்திற்கு மூன்று தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வலியுறுத்து!

Tuesday, January 25th, 2022

முழுமையான தடுப்பூசித் திட்டத்திற்கு மூன்று தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வலியுறுத்தியுள்ளார்.

இதற்கமைய இதுவரை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ள அனைவரும் முழுமையான தடுப்பூசிக்காக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றிப்பது அவசியம் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக உலகளாவிய ரீதியில், இலங்கை சிறந்த நிலையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் இலங்கையில் ஒரு ஆய்வகம் மாத்திரமே இருந்தது. அது தற்போது 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறந்த முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டமையினால், நாட்டை வழமையான நிலைக்குக் கொண்டுவர முடிந்துள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டன. இந்தத் திட்டத்தில் ஒரு இலட்சத்து 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதேவேளை, எதிர்வரும் 29 ஆம் திகதி ஆயிரத்து 50 வைத்தியசாலைக் கட்டமைப்புக்களில் சமய நிகழ்வுகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: