தேங்காயின் உயர்ந்த பட்சவிலை நிர்ணயம்!

Thursday, March 8th, 2018

தேங்காய்க்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெங்கு சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கபிலயக்கந்தலாவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் நுகர்வோருக்கு தேவையான தேங்காய் காணப்படுகின்ற நிலையில் கூடுதலான விலைக்கு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை கிடையாது.

சில இடங்களில் தேங்காய் ஒன்று 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கமைய, அவர்களுக்கு எதிராக விலைக்கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

Related posts:

மலர்ந்துள்ள புதுவருடன் அனைவருக்கும் சுபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமையட்டும் - வாழ்த்துச் செய்தியில...
மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கட்டாருக்கு...
பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி பூரணமடைந்துள்ளது - பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் ...