உரிய பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 18th, 2021

நாட்டை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உரிய பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் அலரி மாளிகையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு சில தடவைகள் முடக்கப்பட்டமையால், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து அரசாங்கத்திற்கு நிதி கிடைக்கும் வழிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் பணம் கிடைக்கும் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு கூடிய விரைவில் நாடு திறக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் நாட்டில் 1.2 பில்லியன் டொலர் கையிருப்பு காணப்பட்டதாகவும், தற்போது 4 பில்லியனாகக் காணப்படும் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதன் மூலம், பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டொலரின் பெறுமதி அதிகரிப்பது தொடர்பில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு தயார் எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: