திங்கட்கிழமை சைட்டம் தொடர்பில் தீர்மானம்!
Saturday, August 26th, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் , சுகாதார அமைச்சர் , சட்டமா அதிபர் , மருத்துவ சபையின் பிரதிநிதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.பேச்சுவார்த்தையின் பின்னர் , திங்கட் கிழமை அளவில் சைட்டம் தொடர்பில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்திருந்தார்.
Related posts:
பெற்றோருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!
சில அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெள...
இலங்கையில் கொரோனாவால் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதழிகமானோர் பாதிப்பு : 941 உயிரிழப்புகள் பதிவா...
|
|
|


