தம்பிக்கு பதவி : அடங்கிவிட்டார் சுரேஸ் !

Wednesday, July 5th, 2017

மாற்றுத் தலைமை கோரிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது தம்பிக்கு அமைச்சுப் பதவி கிடைத்தவுடன் பம்மி விட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேிசய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை:

கவலைக்குரிய விடயம் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் இதுவரை மாற்றுத்தலைமை தமிழ் மக்களுக்கு வேண்டும் என்று தொடர்ந்து கோரி வந்தது. வடக்கு மாகாண  கல்வி அமைச்சராக, சர்வேஸ்வரனுக்கு பதவி கிடைத்ததும் மாற்றுத்தலைமை பற்றிய விடயத்தில் கதை இல்லை அப்படி இருக்க முடியாது என்றார்.

Related posts: