பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Sunday, December 26th, 2021

பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்ய வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக சந்தையிலும் உள்நாட்டிலும் பொருட்களிற்கு தட்டுப்பாடு காணப்படுவதால் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் என தெரிவித்துள்ள அவர் தட்டுப்பாடு காணப்பட்டால் பாரிய கள்ளச்சந்தை விலை காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அரசாங்கம் சந்தையில் தலையிட்டு சந்தையை போட்டித்தன்மை மிகுந்ததாக மாற்றுவதை மாத்திரமே செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறுகிய காலத்திற்குள் பயன்தரக்கூடிய காய்கறிகளை உருவாக்கும் திட்டம் உள்ளது. இதன் மூலம் ஏப்பிரல் புத்தாண்டிற்கு முன்னதாக பயன் பெறும் நோக்கம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: