தமிழர் மூவர் உட்பட மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமனமாகவுள்ளனர்!

Tuesday, April 10th, 2018

நாடு முழுவதும் மேல்நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் வவுனியா மாவட்ட நீதிபதி சிறிநிதி நந்தசேகரன், திருகோணமலை நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதி சூசைதாஸன் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மேல்நீதிமன்ற நீதிபதிகளாக 75 பேர் பதவி வகிக்கின்றனர். அந்த எண்ணிக்கையை 130 ஆக அதிகரிக்க நாடாளுமன்று அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 13 பேர் நியமிக்கப்படவுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts: