சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு?
Friday, April 28th, 2017
இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் அலுவலர் மட்ட உடன்பாடு ஒன்றை காணும் வகையில் பேச்சுக்களை தொடர்வதாக திறைசேரியின் செயலாளர் ஆர் எச் எஸ் சமரதுங்க தெரிவித்துள்ளார்
இது தொடர்பான பேச்சுக்கள் வோசிங்டனில் நடைபெறுவதாகவும் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது அவர் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் மாத இறுதிக்குள் இரண்டு தரப்பும் உடன்பாட்டை எட்டமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் நிதியோட்ட ஸ்திரத்தன்மையை கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியம் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.இந்த விடயப்பரப்பின்கீழ் இலங்கை, வருமானவரி சட்ட வரையை நிறைவுசெய்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழில் விஷேட டெங்கு ஒழிப்பு திட்டம்!
பதவியேற்பு வைபவத்தில் புதிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்தியாவுக்கான பயணம் ஒத்திவைப்பு!
|
|
|


