குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள்!

Wednesday, July 18th, 2018

போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் நகரிலும் நகரை அண்டிய புறநகர்ப்பகுதிகளிலும் பொலிஸாரின் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாண நகர், நல்லூர், கல்வியங்காடு, இருபால, கோப்பாய், நீர்வேலி, உரும்பிராய் போன்ற பிரதேசங்களில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் வருகைதந்த பொலிஸ்மா அதிபர் குடாநாட்டுக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததையடுத்து பொலிஸாரின் ரோந்துகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts: