கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் மூவர் கைது!

Saturday, May 5th, 2018

ஐந்து கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியான தங்கங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் விமான நிலைய கழிப்பறைக்குள் வைத்து தங்கத்தை கைமாற்ற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இந்திய பிரஜைகள் இருவருமேயாகும்.   குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts: