இலங்கையில் மலேரியா பரவும் அபாயம் – மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் எச்சரிக்கை!
Thursday, April 20th, 2023இந்த நாட்டில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
மலேரியா பரவும் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களிடம் இருந்து மலேரியா பரவும் அபாயம் உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சம்பா அளுத்வீர தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வெளிநாட்டு பணியாளர்கள், இரத்தினக்கல் வியாபாரிகள் மற்றும் அமைதி காக்கும் படையினர் மற்றும் வௌிநாடு செல்லும் மக்கள் ஊடாக மலேரியா நாட்டிற்குள் வரக்கூடும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலப்பகுதியில், ஆசியாவில் சுமார் 600,000 மலேரியா நோயாளிகள் இறந்துள்ள நிலையில் கடந்த ஆண்டில் இலங்கையில் 37 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் வருடமொன்றுக்கு 2000 தொழுநோயாளர்கள் உலக சுகாதார நிறுவனம் தகவல்!
O/L மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை - பரீட்சைகள் திணைக்களம்!
வேகமான வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் உயர்ந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி – மத்திய வங்கி தகவல்!
|
|
தலைநகரின் முக்கிய கேந்திர மையங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்த...
ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட முடியாது - இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் எச்சரிக்கை!
அரச தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச ந...