எரிபொருளின் விலையை நிர்ணயிக்க புதிய விலை சூத்திரம் – மத்திய வங்கிஆளுநர்!

Thursday, October 26th, 2017

அடுத்த வருடம் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்கான புதிய விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுமென்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டளவில் நாட்டின் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த அவர் புதிய முதலீடுகளுக்காக வரும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கூடுதலான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் குமாரசுவாமி சுட்டிக்காட்டினார்.

இதற்காக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை குறைந்த செலவில் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற கொழும்பு கப்பல் உரிமையாளர்களின் கல்வி பீடத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கருத்துக்களை வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: