3500 மாணவர்களை தாதியர் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, September 13th, 2023

3500 மாணவர்களை தாதியர் பயிற்சி நெறிக்கு  இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து 15.09.2023 முதல் 18.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலதிக தகவல்களை 15.09.2023 திகதியிட்ட அரசாங்க வர்த்தமானியில் இருந்தும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: