இலங்கை மக்களுக்கு விசேட வைத்தியர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!
Tuesday, March 10th, 2020
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றானது வெப்பநிலையில் அதிகரிக்கின்றதா? குறைகின்றதா? என்பது குறித்து விஞ்ஞான ரீதியில் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லையென தெரியவந்துள்ளது.
மேற்படி தகவலை, விசேட வைத்தியர் திருமதி பிரியங்கா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே கொரோனா வைரஸ் நோய் குறித்து, ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்வதில் புத்திசாலித்தனமாக செயல்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெரும்பாலானோருக்கு பொதுவான நோய் நிலைமையாக ஏற்படக்கூடியது என்றும் சிலருக்கு சிக்கலைக்கொண்டதாக ஏற்படக்கூடும் எனறும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் மேலும் சிலருக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அனர்த்த வலயத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் அவதானத்துடன் செயற்படவேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இக்கொரோனா வைரஸ் இருமல், தும்மலின் போதும் வெளியேறும் எச்சில் மூலமும் பரவக்கூடும் என்றும் குறிப்பிட்ட விசேட வைத்தியர் திருமதி பிரியங்கா ரணசிங்க, காற்றின் மூலம் இது பரவக்கூடிய தன்மை மிகவும் குறைவானதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


