இலங்கையின் சுதந்திர தினத்தன்று விசேட வாகன போக்குவரத்து!

Friday, February 2nd, 2018

நடைபெறவுள்ள இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விசேட வாகன போக்குவரத்து மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத்  திட்டம் கொழும்பு கோட்டை காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்கும் எனவும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மட்டுப்படுத்தப்பட்டிருக்குமெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: