கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரஷ்யாவுக்கு வழங்குகின்றது ஈரான் – ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல்!

Thursday, February 22nd, 2024

ஈரான், ரஷ்யாவிற்கு சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வழங்கவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் ஏவுகணை உள்ளிட்ட 400 மேற்பட்ட அதிபயங்கர ஆயுதங்களை வழங்கவுள்ளது. இந்த ஏவுகணைகள் 300 முதல் 700 கிலோமீற்றர் வரையில் தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை.

கடந்த ஆண்டின் இறுதியில் தெஹ்ரான் மற்றும் மாஸ்கோவில் ஈரான் மற்றும் ரஷ்ய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின் பின்னர் இவ்வாண்டு ஆரம்பம் முதலே ஏவுகணை ஏற்றுமதி ஆரம்பமாகியது என ஈரானிய இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருபியன் கடல் வழியாகவும், விமானம் மூலமாகவும் ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐ.நா பாதுகாப்புச் சபை ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை ஏற்றுமதிகளுக்கு ஈரானுக்கு எதிராக தடை விதித்திருந்தது. இந்த தடையானது கடந்த வருடம் அக்டோபரில் நீக்கப்பட்டது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டத்தின் மீதான தடைகளைத் தக்கவைத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு எதிரான மொஸ்கோவின் போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா சமீபத்தில் ரஷ்யாவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ஏவுகருவிகளை வழங்கியதாக வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில், வட கொரியாவிலிருந்து ஏற்கனவே பெறப்பட்ட ஏவுகணைகளுக்கு மேலதிகமாக, ஈரானிடம் இருந்து குறுகிய தூர பாலிஸ்டிக் ஆயுதங்களை ரஷ்யா கொள்வனவு செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த ஏவுகணை விநியோகம் இடம்பெறுவதை ஈரான் மற்றும் ரஷ்ய நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: