கொழும்பில் பதற்றம் – மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையில்!

Monday, May 9th, 2022

கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து மறுஅறிவித்தல் வரை   மேல் மாகாணத்தில் பொலிசாரினால்   ஊரங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று அலரி மாளிகைப் பகுதியில்   ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடியிருந்தனர். இந்நிலையில், கடந்த 30 நாட்களுக்கும் மேலாக காலிமுகத் திடல் மற்றும் அலரி மாளிகைப் பகுதியில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்  மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து குறித்த ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts: