இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாது? – பிரித்தானியா!
Saturday, December 2nd, 2017
பிரித்தானிய அரசாங்கம் புதிதாக எந்த ஒரு இலங்கை அகதிகளின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மொத்தமாக 3 ஆயிரத்து 535 அகதிகள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 838 அகாதிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த 48 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 82 பேரும் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ள போதும், அவர்களுள் ஒருவரது விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சட்டவிரோத சொத்து குற்றங்களை விசாரிக்க விசேட வர்த்தமானி - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
மருந்து உற்பத்தியாளர்களுக்கு விசேட சலுகை - சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
|
|
|


