இந்தோனேஷியாவடன் மூன்று புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து!
Thursday, January 25th, 2018
இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
மருத்துவ உபகரண உற்பத்தி, ரயில்வே துறையின் அபிவிருத்தி, கல்வித்துறையின் மேம்பாடு போன்றவற்றில் இலங்கைக்கு உதவும் வகையில், உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வந்துள்ள இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இந்தோனேஷிய ஜனாதிபதி நேற்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் பிரதானமாக மூன்று விடயங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான தனிநபர் மற்றும் நிறுவன ஆற்றல்களை மேம்படுத்தும் வழிவகைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
Related posts:
நிதி நிறுவன ஊழியர் தாக்குதல் - கர்ப்பிணி பெண் வைத்தியசாலையில் அனுமதி - வவுனியாவில் சம்பவம்!
நீதிபதி இளஞ்செழியனின் மெய்க்காப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சந்தேக நபர்களுக்கு பிணை!
அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
|
|