அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு பணிப்பு!

Wednesday, January 31st, 2018

பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி , தற்போது சந்தையில் நிலவும் அரிசி தொகை மற்றும் மற்றைய விடயங்கள் தொடர்பில் ஆராய அமைச்சரவை குழுவொன்றும் நியமிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

விவசாயம், கைத்தொழில் மற்றும் வர்த்தகம் போன்று கிராமப்புற பொருளாதாரம் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

Related posts: