யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டுக் குழு அட்டகாசம் – இருவர் வைத்தியசாலையில்!

Monday, May 11th, 2020

கமி என்றழைக்கப்படும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இருவர் படுகாயமடைந்ததுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோவும் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு நேரங்களில், இந்த வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமி என்ற பெயருடன் செயற்படும் வாள்வெட்டுக்குழுவினர் இன்று மதியம் 2.00 மணியளவில் 10 மோட்டார் சைக்கிளில் புங்கன்குளம் வீதி வழியாக சென்றுள்ளதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.

இவ்வாறு சென்றவர்கள், முத்திரைச் சந்திக்கு சென்று அவ்விடத்தில் நின்ற 2 ஓட்டோக்களை சேதப்படுத்தியதுடன், இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்காகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: