கொரோனாவை மறைக்க பொலிஸாருக்கு இலஞ்சம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தேகம்!

Thursday, March 26th, 2020

 “சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகர் சிவராஜ்போல் சற்குணராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை மறைக்க பொலிஸாருக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

அதனை விட அவர்கள் அதனைப் போலி மருத்துவச் சான்றிதழுடன் நிரூபிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டனர்” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரனை, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி மிரட்டிய சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண மருத்துவ அதிகாரிகள் சங்கம் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கு அமைவாக, இது தொடர்பான விசாரணைகள் பதில் பொலிஸ்மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: