அமரர் சிவஞானம் சரோஜினிதேவியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை !
Wednesday, April 25th, 2018காலஞ்சென்ற அமரர் சீ.வி.கே.சிவஞானம் சரோஜினிதேவியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வசந்தன் மற்றும் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் ஆகியோர் அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.
காலஞ்சென்ற அமரர் சரோஜினிதேவி வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
உடுவில் பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
வலிகாமம் தெற்கு முன்பள்ளிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!
காலத்தினால் செதுக்கப்பட்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - வை. தவநாதன் பெருமிதம்!
|
|