சிவகுரு பாலகிருஸ்ணனின் தந்தையாருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி!
Thursday, November 24th, 2016
அமரர் கந்தையா சிவகுருவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
காலம் சென்ற அமரர் கந்தையா சிவகுரு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரமான பாலகிருஸ்ணனின் (ஜீவன்) தந்தையாராவார்.
அன்னாரது பிரிவால் துயரற்றிருக்கும் இலங்கை, இந்தியா வாழ் அன்னாரது உறவுகளுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரிலும் தொலைபேசிவாயிலாகவும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாழ்ந்துவந்த அமரர் சிவகுரு நேற்றுமுன்தினம் (22)காலமானமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சார விபத்து : இருவர் படுகாயம் - நல்லூரில் சம்பவம்!
வார இறுதிக்கு அடையாள அட்டை இலக்க முறை செல்லுபடியாகாது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண!
நிறைவுக்கு வந்தது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாச...
|
|