புர்கா ஆடைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்!
Wednesday, July 31st, 2019இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலையடுத்து முகம் மூடும் வகையிலான ஆடைகள் அணிவதற்கு தடை விதிப்பதாக தெரிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த தடையை தற்போது நிரந்தரமாக்கும் முயற்சியின் அடிப்படையாக இவ் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உதவிக்கரம் நீட்டியது ஈ.பி.டி.பி : நல்லூர் பிரதேச சபையையும் வென்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
மருத்துவமனைகளின் அபிவிருத்திக்குத் புதிய திட்டம் - சுகாதரத்திணைக்களம் !
இலங்கை ஒருபோதும் சரணடையாது - வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே!
|
|