மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன்!
Monday, June 18th, 2018மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான சரியான திட்டங்களை முன்மொழிவதன் ஊடாகவே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயலரும் மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்களை தனது அலுவலகத்தில் சந்தித்து மக்களின் தேவைப்பாடுகள் குறித்த கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இன்று மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பாதவர்களாக பல்வேறு சுமைகளை தாங்கியவாறு வாழவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாண் ஏற முழம் சறுக்கும் நிலையாகவே மக்களின் நிலைமைகள் இருக்கின்ற நிலையில் மக்களின் நிலைமைகளை நன்கு உணர்ந்தவர்களாக அவர்களின் அடிப்படை தேவைகளை ஆழமாக கருத்தில் கொண்டு முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் எனவும் வை.தவநாதன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
நடைபெற்ற இந்த சந்திப்பில் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச அமைப்பாளர்கள் வட்டார பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
தமது பிரதேச மக்களின் தேவைப்பாடுகள் குறித்த பல விடயங்கள் பிரதேச அமைப்பாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்களால் மாவட்ட அமைப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|