அமரர் கபிரியல் ஞானசீலனின்  பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை !

Thursday, April 26th, 2018

காலஞ்சென்ற அமரர் கபிரியல் ஞானசிலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.

இலக்கம் 59, அரசவடிசாலை, குருநகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வசந்தன் மற்றும் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான  இளங்கோ (றீகன்)  ஆகியோர் அன்னாரது பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தனர்..

காலஞ்சென்ற அமரர் கபிரியல் ஞானசிலன் தோழர் வவியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

31317844_1749130495126030_6712228895107579904_n

Related posts:


மூவின மக்களும் வாழும் மாகாணம் என்பதால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகின்றது -  ஈ.பி....
அனலைதீவு - புளியம்தீவு இணைப்பு வீதியை நவீன முறையில் சீரமைக்க 83 மில்லியன் ஒதுக்கீடு - ஊர்காவற்றுறை ப...
செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் – சாதகமான பதில் பெற்...