அமரர் ஆனந்தராஜா ரவீந்திரராஜாவுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!

Wednesday, November 16th, 2016

காலஞ்சென்ற முன்னாள் திருகோணமலை நகராட்சிமன்ற உத்தியோகத்தர் அமரர் ஆனந்தராஜா ரவீந்திரராஜாவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிதி  புஸ்பராச அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.

அமரர் ஆனந்தரராஜா ரவீந்திராஜா நேற்றையதினம் (15.11.2016) காலமானார். இன்றையதினம் இல.45, வன்னியார் வீதி, திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்ற கட்சியின் பிரதிநிதி புஸ்பராசா அன்னாரின் பூதவுடலுக்கு தமது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

14508575_1228748457164239_504088447_n

Related posts: