அமரர் ஆனந்தராஜா ரவீந்திரராஜாவுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!
Wednesday, November 16th, 2016காலஞ்சென்ற முன்னாள் திருகோணமலை நகராட்சிமன்ற உத்தியோகத்தர் அமரர் ஆனந்தராஜா ரவீந்திரராஜாவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிதி புஸ்பராச அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.
அமரர் ஆனந்தரராஜா ரவீந்திராஜா நேற்றையதினம் (15.11.2016) காலமானார். இன்றையதினம் இல.45, வன்னியார் வீதி, திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்ற கட்சியின் பிரதிநிதி புஸ்பராசா அன்னாரின் பூதவுடலுக்கு தமது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
Related posts:
முன்னாள் இராணுவ வீரர்களின் கோரிக்கை குறித்து அவதானம்!
காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகர்வு - வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்...
பலாலி சர்வதேச விமான நிலைய பயணிகள் வசதிகளை 200 மில்லியன் ரூபாய் செலவில் விரிவுபடுத்த நடவடிக்கை - அமைச...
|
|