காரைநகரில் விபத்து : இளைஞன் பலி!

Sunday, September 3rd, 2017

காரைநகர் களபூமி பகுதியில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

காரைநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞனே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

கோயில் திருவிழாவிற்காக தயிர் வாங்குவதற்காக அதி வேகத்தில்  மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றபோது வேக  கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதியதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் ஸ்தலத்திலே  உயிரிழந்ததுடன் மற்றையவர்   படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா  வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகர் தோப்புக்காட்டை சேர்ந்த 30 வயதுடைய வேலுப்பிள்ளை சிவஞானவேல்  என்ற இளைஞனே பரிதாபமாக உயிரிழந்ததுடன் அதே இடத்தை சேர்ந்த  30 வயதுடைய சிவபாலசிங்கம் சிவராஜ்  என்ற இளைஞன்  படுகாயமடைந்தவராவார்.

Related posts: