நிரந்தர தீர்வை  எட்டவேண்டுமாயின் ஈ.பி.டி.பியின் அரசியல்பலம்  உறுதிப்பட வேண்டும் –  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜீவன்!

Saturday, November 11th, 2017

தமிழ் மமக்கள் அரசியல் ரீதியாகவும் சரி அபிவிருத்தி ரீதியாகவும் சரி நிரந்தரமான ஒர தீர்வை எட்டவேண்டுமாயின் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் பலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் வேலணை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் வட்டார நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

தமிழ் மக்களது பிரச்சினைகளை  தீர்த்துவைப்பதற்கான சந்தர்ப்பங்கள் பல கடந்த காலத்தில் இதர தமிழ் அரசியல் தரப்பினருக்கு கிடைத்திருந்தது. ஆனால் அவர்கள் தமது சுயநலன்களுக்காக அவற்றை தட்டிக்கழித்துவிட்டு மக்களின் அவலங்களில் தமது நலன்களை மேம்டுத்திக் கொண்டிருந்தனர்.

இன்று தமிழ் மக்களது தீர்வுக்காக உழைப்பவர்களாக தங்களைக்காட்டி இன்றும் கிடைக்கவுள்ள தீர்வுகளை தடுத்துவருகின்றனர்.

இந்நிலையை தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்து தமிழ் மக்களின் வழிகாட்டியாக வாழ்ந்துகொண்டிருக்கும் தலைவராக மக்களுடன் இருந்து மக்களுக்காக வாழ்ந்துகொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே.

இன்று எமது கட்சியால் அமைக்கப்பட்டுள்ள இந்த வட்டார ரீதியான கட்டமைப்பானது கட்சியின் எதிர்கால நலன் சார்ந்ததொன்றல்ல. அது தமிழ் மக்களின் எதிர்காலம் சார்ந்தது. எமது கட்சியையும் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவையும் பலப்படுத்துவதனூடாகவே தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அரசியல் தீர்வுகளையும் வெற்றிகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

Related posts: