உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுளின் இழப்பினை ஈடு செய்ய நட்டஈடு வழங்க முடியுமா?

Thursday, June 7th, 2018

உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால், குளம் உடைப்பெடுக்காமல், ஏற்படவிருந்த பாரிய ஆபத்து நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடு செய்யும் வகையில் நட்டஈடுகளை வழங்க முடியுமா? என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களிடமே இவ்வாறு செயலாளர் நாயகம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது –

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள உன்னிச்சைக்குளத்தின் அதிக நீர் காரணமாக அதன் வான் கதவுகள் கடந்த மாதம் 25ஆம் திகதி அதிகாலை திறந்துவிடப்பட்டதனால், இந்த போகத்தில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 800 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரமாக சுமார் 6000 ஏக்கர் நெற் செய்கைப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 10 கோடி ரூபா வரையில் நட்டமேற்பட்டுள்ளதாக அப் பகுதி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி குளத்தின் நீர் மட்ட அதிகரிப்பு தொடர்பில் கடந்த மாதம் 19, 20, 21ஆம் திகதிகளில் பொறுப்பு வாய்ந்தவர்களால் நீர்ப்பாசனத் திட்ட அதிகாரிகளிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அதனை அவதானத்தில் கொள்ளாமல், 23ஆம் திகதி மேற்படி குளத்தின் ஆபத்தான நிலை உணர்த்தப்பட்ட நிலையில், 24ஆம் திகதி ஆறு அங்குல நீர் திறந்துவிடப்படுமென நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளினால் கூறப்பட்டு, 25ஆம் திகதி அதிகாiலை 15 கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால்தான் மேற்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்படி வான் கதவுகள் திறக்கப்பட்தன் பின்னர் அப்பகுதியில் நீர்ப்பாசன அதிகாரிகள் எவருமே இருக்கவில்லை என்றும், எனவே, இந்த செயற்பாடானது அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேற்படி குளத்தில் நீர் மட்டம் உயருகின்றபோது, அதன் நீரை வெளியேற்றுவதற்கு உரிய வடிச்சல் ஆறு இல்லாததன் காரணமாகவே இத்தகைய நிலைமை ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் ஒரு முறைப்பாடு முன்வைக்கப்படுகின்றது.

அந்தவகையில்

1. குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால், குளம் உடைப்பெடுக்காமல், ஏற்படவிருந்த பாரிய ஆபத்து நிலை தவிர்க்கப்பட்டுள்ளது எனினும், இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடு செய்யும் வகையில் நட்டஈடுகளை வழங்க முடியுமா?
2. வான் கதவுகள் திறப்பு காரணமாக ஏற்பட்டுள்ள விவசாய மக்களின் பாதிப்புகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரிகளது கனயீனங்கள் காரணமாக இருப்பின், அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?

3. குளத்தில் உயர்வடையும் நீரை பாதுகாப்பான முறையில் வெளியேற்ற ஏதுவாக வடிச்சல் ஆற்றை அமைப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேற்படி நிலைமையினை ஆராய்ந்து, குறித்த கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களிடம் எதிர்பார்க்கின்றேன்.

Related posts:

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்? அரசியல் தொடர்புகள் உண்ட...
கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? – நா...
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நோக்கியதான பயணத்தை சீர...

கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவா...
குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க மு...
கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற...