35 குர்து தீவிரவாதிகள் பலி!- துருக்கி ராணுவம்!!

Sunday, July 31st, 2016

ஈராக்கின் எல்லை அருகே தென் கிழக்கு பகுதியில் உள்ள ஹக்காரி மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை அழிக்க முயன்ற 35 குர்து இன தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹக்காரி மாகாணத்தில் உள்ள க்யூகர்கா மாவட்டத்தில் நடந்த மோதலில் எட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. தடை செய்யப்பட்ட பிகேகே என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், ராணுவ தளத்தை நெருங்கிய போது அவர்கள் உளவு விமானம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஓர் ஆண்டுக்கு முன்பு, துருக்கி ராணுவத்திற்கும் பிகே கே என்ற அமைப்பிற்கும் இடையே இருந்த போர் நிறுத்தம் முறிந்த பின் துருக்கி ராணுவம் கிளர்ச்சியை எதிர்த்து போராடிவருகிறது

Related posts: