கனடாவில் குடும்பத்தையும் வெட்டி கொன்று இணையத்தில் தகவல் பரப்பிய இளைஞர்!

Wednesday, July 31st, 2019

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் பெற்றோர் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரத்தில் 23 வயதான மென்ஹாஸ் ஜமான் என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர். கனடாவை உலுக்கிய இச்சம்வத்தில், கொலைக்கு பின்னர், இணைய விளையாட்டுகளில் ஈர்ப்பு கொண்ட அந்த இளைஞர் குறித்த தகவலை குறுஞ்செய்தியாக பரப்பியுள்ளார்.

மொத்த குடும்பத்தையும் தாம் கொன்றுள்ளதாகவும், உயிருடன் தப்பினால் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை பார்வையிட்ட இருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் உடனடியாக மார்க்கம் பகுதியில் உள்ள ஜமான் குடியிருப்புக்கு விரைந்துள்ளனர்.

குடியிருப்பினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த நால்வரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஜமானின் தந்தை Moniruz கடந்த 1980 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து தமது மனைவியுடன் கனடா வந்துள்ளார்.கடந்த மாதமே Moniruz தம்பதி தங்களது 25 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

இணையய விளையாட்டுகளில் ஈர்ப்பு கொண்ட ஜமான், அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் விசாரணைக்கு முடிவிலேயே உண்மை என்ன என்பது தெரியவரும்.

Related posts: