லிபியக் கடற்கரையில் 87 சடலங்கள் கரையொதுங்கியது!
Wednesday, July 27th, 2016லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 87 அகதிகளின் சடலங்கள் லிபியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
தலைநகர் திரிபோலிக்கு வடக்கே உள்ள சப்ரதா கடற்கரையிலிருந்து 87 சடலங்களை சிறப்பு மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். அந்த சடலங்கள், 5 அல்லது 6 நாட்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில், கடலில் மூழ்கிய அகதிகளின் சடலங்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. சனிக்கிழமை 41 சடலங்களும் ஏனைய சடலங்கள் ஞாயிற்றுக்கிழமையும் கரையொதுங்கியுள்ளது .
Related posts:
துணை அதிபரை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்புக் கோருகிறார் டிரம்பர்!
வடகொரிய ஜனாதிபதி தென் கொரிய தூதுக்குழுவினருடன் சந்திப்பு!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கியிருந்த ஆடம்பர விடுதிக்கு மேல் மர்ம விமானம் ஒன்ற அத்துமீறி பறந்ததால் ப...
|
|