ஆளுநர் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு – நைஜீரியாவில் நால்வர் உயிரிழப்பு!
Thursday, August 22nd, 2019நைஜீரியாவில் துணை ஆளுநர் சென்ற வாகன அணிவகுப்பின் மீது மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிசார் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் அபுஜாவில் நடைபெற இருந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நைஜீரியாவின் நசராவா மாகாணத்தின் துணை ஆளுநர் இம்மானுவேல் புறப்பட்டுச் சென்ற வேளையில்,
திடீரென வழியில் மர்ம நபர் ஒருவர், ஆளுநரின் வாகன அணிவகுப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார். தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார் என இன்னும் தெரியவில்லைசம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகலை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
போக்குவரத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள்!
தமது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை - ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளா...
இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டது நீண்டதூர தொடருந்து சேவைகள்!
|
|