நைஜீரியாவில் 66 பேரின் சடலங்கள் மீட்பு!

Monday, February 18th, 2019

நைஜீரியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 66 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களால் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நைஜீரியாவில் தேர்தல் நடக்கவிருந்த நிலையில், இவ்வாறு மனித உடல்கள் மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் கதுனா மாகாணத்திலுள்ள 8 வெவ்வேறு கிராமங்களில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நைஜீரியாவில் நடைபெறவிருந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் 23 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆரம்பமாவதற்கு 5 மணித்தியாலங்களுக்கு முன்னதாக, நைஜீரியாவின் சுயாதீன தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: