ஹஜ் பயணிகளுக்கு இடையூறு : சவுதிக்கு மக்களை அனுப்ப ஈரான் மறுப்பு!
Monday, May 30th, 2016
இந்த வருடம் ஈரான் தனது மக்களை ஹஜ் வழிபாட்டிற்காக சவுதி அரேபியாவிற்கு அனுப்பாது என ஈரானின் பண்பாட்டு துறை அமைச்சர் அலி ஜன்னடி தெரிவித்துள்ளார்.
சவுதி அதிகாரிகள் ஈரானிய புனித யாத்ரிகர்களின் பங்களிப்பிற்கு இடையூறு விளைவிப்பதால் அது சாத்தியமற்றது என அவர் கூறியுள்ளார். கடந்த வருடம் ஹஜ் பயணத்தின்போது, ஈரானியர்கள் பலர் உள்ளிட்ட , ஆயிரக்கணக்கான புனித யாத்திரிகர்கள் மோசமான கூட்ட நெரிசலில் சிக்கி கொல்லப்பட்டனர் .இச்சம்பவத்திற்கு ஈரான் சவுதி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.
சிரியா மற்றும் ஏமன் உட்பட பல்வேறு போர் பகுதிகளில் இந்த இரு பிராந்திய போட்டி நாடுகளும் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளதால் ஈரான் மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையேயான பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆஸி. வீரர்கள் இனி ஒருபோதும் என் நண்பர்கள் அல்ல - விராட் கோலி!
பங்களாதேஷ் பிரதமரை கொலை செய்ய முற்பட்ட சம்பவம் - 11 பேருக்கு 20 வருட சிறை!
மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சு !
|
|
|


